Sunday, June 23, 2013

பேஸ்புக் படுத்தும் பாடு!

    கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக்மூலம் பிரபலமாவதும் ப்ராப்ளம் ஆவதும் சிறப்பாகவே நடந்து வரும் தருணத்தில் இரு நாட்களுக்கு முன்பு ஒரு கனவு...

     திடீர் என நான் டி.வி.பெட்டியில் தோன்றி நான்கைந்து பேர்களுடன் சேந்து கொண்டு கூச்சல் போடுவது போல...இது என்ன புதுசா இருக்கே என யோசிக்கும்போது தான் புரிந்தது...கருத்து கந்தசாமிகளில் நானும் ஒருவனாக மாற வேண்டும் என்கிற ஆசை எனக்குள் தோன்றி மெல்ல மெல்ல வெறியாக மாறுவதை உணர்ந்தேன்.

     இதற்கு என்ன வழி என சதா யோசித்து பார்த்ததில்...ப்ளாக் எழுதவேண்டும்.....பிறகு அதை ஷேர் செய்ய வேண்டும்....எப்படியும் கொஞ்சநாளில் ஈரோடு சங்கமம் என சில இடங்களில் அழைத்து என் சேவையை(!) பாராட்டி சென்னிமலை போர்வை போர்த்துவார்கள்.... பிறகு அப்படியே பத்திரிக்கைகளில் எழுதி...அப்படியே டி.வி. பெட்டிக்குள் புகுந்துவிட்டால் அதுவே என்னை பிரபலமாக்கி மெல்ல ஒரு அரசியல் கட்சிக்குள் சேர்த்துவிடும்....பிறகு என்ன, ஒரு எம்.எல்.எ வேண்டாம் வேண்டாம்...ஒரு எம்.பி. அதுவும் ஜனங்களிடம் சென்று அலையோ அலை என அலையாமல்...நோகாமல் நோம்பிக்கும்பிடும் ராஜ்ய சபா எம்.பி. ஆகி விட்டால் கூட போதும் என்ற ஒரு சிறிய ஆசை தோன்றியது.

     உடனே தூசி மண்டிக்கிடந்த என் ப்ளாக்கை தூசி தட்டி துடைத்து, ப்ளாக்-கின் குல சாமிகளான அதிஷா, ஈரோடு கதிர், உண்மைத்தமிழன் ஆகியோர் இருக்கும் திசைகள் பார்த்து ஒரு பெரிய கும்பிடாக போட்டு விட்டு ஒரு ப்ளாக் எழுதி அதை பேஸ்புக்-கிலும் போட்டுவிட்டேன்....வார நாளாக இருந்திருந்தால் எல்லோரும் சின்சியராக ஆஃபீசில் வந்து கம்ப்யூட்டரில் உக்காந்து பேஸ்புக் பார்த்து லைக்கி இருப்பார்கள்...என் நேரம் நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை....உடனே என் மூளை தீவிரமாக யோசித்து ஒரு நாலைந்து பேரை டேக் செய்யச்சொன்னது... இது தான் விதி!....

     நான் லாக்-அவுட் செய்து சென்ற சில நிமிடங்களில் சௌதி அரேபியா சுரேஷ் சீனு சார் முதல் உள்ளூர் ஜீவானந்தன் சார் வரை போன் செய்து என்ன ஆச்சு உங்க அக்கவுன்ட் டி-ஆக்டிவேட்-ல் இருக்கு என்று விசாரித்தார்கள்...இதற்கே எனக்கு மண்டையில் லேசாக ஒரு கொம்பு முளைத்திருப்பதை உணர்ந்ததேன்....(பின்னே நம்மை காணோம்னு பேஸ்புக்-கே பர பரப்பக்குதுன்னா சும்மாவா)....

     அடித்து பிடித்து ஓடி வந்து என் கம்ப்யூட்டரை ஆன் செய்து பேஸ்புக் லாக்-இன் செய்தால்....அங்கே வெக்கிராங்கப்பா டிவிஸ்டு!

      யோவ்...சமீக காலமா நீ நிறையப்பேரை டேக் செஞ்சு குடுக்கிற டார்ச்சரை பார்த்துக்கிட்டு தான் இருக்கிறோம்...அதான் தற்காலிகமா உன் அக்கவுன்ட் டி-ஆக்டிவேட்!

     நாங்க வெக்கிற டெஸ்டுலே நீ பாசான தான் உள்ளே போகலாம்...ஸ்கிப் செஞ்சாலோ அல்லது ஒண்ணு தப்பானாலும் நீ பதினாலு நாளைக்கு உள்ளே நுழைய முடியாதுன்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க!

    பரீட்சைக்கு படிக்காத ஒரே புக்கே பேஸ்புக் தான்...இவங்களே இப்படி கூடி கும்மியடிச்சா என்ன நியாயம்?

     என்னடான்னா பார்த்தா நாலு மாசத்துக்கு முன்னே நான்போட்ட போட்டோவை எல்லாம் போட்டு இதிலே நீ யாரை டேக் செஞ்சே சொல்லுன்னு ஆறு ஆப்ஷன் எல்லாம் கொடுக்கிறாங்க! நாம செஞ்ச பாவம் (டேக்) கொஞ்சமா நஞ்சமா ஞாபகம் வைக்க....

     நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி, KBC ரேஞ்சுக்கெல்லாம் ஆப்ஷன்ஸ்....நல்ல வேளையா முதல் கேள்வியை தாண்டினா.....ரெண்டாவது கேள்வியில் சிக்கி...அது ஜீவா சார் தான்னு பதில் சொன்னா... மூணாவது கேள்வி....அதையும் தாண்டி முடிச்ச பிறகு தான்...சரி தொலை...எல்லாம் சரியா சொல்லிட்டே...இனிமே டேக் செய்வியா என்பது போல எச்சரித்து விட்டுட்டாங்க...

     இப்ப தான் பாட்ஷா படத்திலே ரஜினி சொன்னது ஞாபகத்துக்கு வருது :
     "ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான்...ஆனா கைவிடமாட்டான்...."
    
    ஓ...சாரி...நான் சினிமா நடிகனை பத்தி சொல்லிட்டேனா....வெரிசாரி...நான் தமிழனாச்சே...திருவள்ளுவர் சொன்னது தான் ஞாபகத்துக்கு வந்துச்சு :
                                         பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கினா 
                                         பிற்பகல் தானே வரும்!

இன்னும் கொஞ்ச நாளைக்கு கனவுலே கூட யாரையும் டேக் செய்யமாட்டேன்பா!

3 comments:

  1. Most enjoyable- even if you suffered a bit.:)

    ReplyDelete
  2. நாம செஞ்ச பாவம் (டேக்) கொஞ்சமா நஞ்சமா ஞாபகம் வைக்க....
    amam... tek nna enna sir?

    ReplyDelete